News







77 வது சுதந்திர தின விழா வைபவத்திற்கான மரம் நடுகை செய்யும் நிகழ்வு - 2025.02.04
77 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு பிரதேச செயலாளரின் தலைமையில் கீழ் கிரான்குளம்150B, மட்/விநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2025.01.28 பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2025.01.28
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் ஏற்பாட்டில் 2025.01.28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ கந்தசாமி பிரபு, பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களும் கௌரவ S.M.நளீம் அவர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் , கிராம சேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ,சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.












