பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக நிகழ்வு - 2025.02.04
மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேக நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய 04.02.2025 அன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் இடம் பெற்றது.
நிகழ்வு 1 : பாற்குடபவனி
மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பாற்குடபவனியானது ஆரையம்பதி செல்வாநகர் சிவன் ஆலயத்திலிருந்து பிரதான வீதியினூடாக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தினை வந்தடைந்தது.
நிகழ்வு 2 : ஆலய சங்காபிஷேக கிரியைகள்
சங்காபிஷேக கிரியைகள் யாவும் களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு வேதாகம குருமணி கிரியா ஜோதி சாமஸ்ரீ தேசமான்ய சிவஸ்ரீ சண்முக மயூரவதனக் குருக்கள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சங்காபிஷேக கிரியைகளின் போது உதவிக் குருக்களாக ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலய குரு சைவ நன்மணி சிவஸ்ரீ ஜெ.ஜெய்ப்பிரதாபன் சர்மா அவர்களும் ஆரையம்பதி வைத்தியசாலை ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலய குரு சிவஸ்ரீ செ.சிந்துஜன் ஐயா அவர்களும் பங்கேற்றனர்.
நிகழ்வு 3 : அன்னதான நிகழ்வு
சங்காபிஷேக கிரியைகள் யாவும் நிறைவுற்றதும் ஆலய நிருவாகத்தினரால் அன்னதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
 WhatsApp Image 2025 02 05 at 10.23.59 AMWhatsApp Image 2025 02 05 at 10.24.03 AMWhatsApp Image 2025 02 05 at 10.24.10 AMWhatsApp Image 2025 02 05 at 10.24.17 AMWhatsApp Image 2025 02 05 at 10.24.18 AMWhatsApp Image 2025 02 05 at 10.24.20 AMWhatsApp Image 2025 02 05 at 12.54.13 PM

77 வது சுதந்திர தின விழா வைபவத்திற்கான மரம் நடுகை செய்யும் நிகழ்வு - 2025.02.04

77 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு பிரதேச செயலாளரின் தலைமையில் கீழ் கிரான்குளம்150B, மட்/விநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

tree plant
புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தொடர்பான பாதுகாப்பான புலம்பெயர்வும் முன்னேற்றமும் தொடர்பான செயலமர்வு.
மேற்படி நிகழ்வானது நிருவாக உத்தியோகத்தர் தலைமையில் 30.01.2025 அன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு AMCOR நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம அலுவலர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் , உளவளத்துணையாளர்கள், நிவாரண சகோதரி மற்றும் ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.1 1
 
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு
மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் 2025.02.04 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது. பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக உயிர் நீர்த்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செய்யப்பட்டது. தொடர்ந்து பிரதேச செயலாளரினால் உத்தியோகத்தர்களுக்கு சுதந்திர தினம் பற்றியும் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் Clean Sri Lanka வேலைத் திட்டம் பற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், நிருவாக கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
indepen

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2025.01.28 பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் - 2025.01.28 


மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் ஏற்பாட்டில் 2025.01.28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ கந்தசாமி  பிரபு, பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான  கௌரவ வைத்தியர் இளையதம்பி சிறிநாத்  அவர்களும் கௌரவ S.M.நளீம் அவர்களும் கலந்துகொண்டனர்.


மேலும் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் , கிராம சேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ,சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  உட்பட  பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

2

News & Events

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
Sep2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top