News
சர்வதேச சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு தேசிய மர நடுகை வேலைத்திட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகெளரி தினேஷ் அவர்களின் தலைமையில் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், உப அதிபர், தலைமையக முகாமையாளர், கருத்திட்ட முகாமையாளர் மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் May மாதத்திற்கான அரிசி வழங்கும் நிகழ்வு 2024.06.11 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோவில்குளம், ஒல்லிக்குளம், புதுக்குடியிருப்பு மற்றும் மாவிலங்கதுறை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதேச செயலாளர் அவர்களினால் அரிசி வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி ரண்விமன வீடமைப்பு வீட்டிற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு 2024.08.22 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி வீடமைப்பு சீட்டிலுப்பில் வெற்றி பெற்ற பயனாளியின் வீடு கையளிக்கும் நிகழ்வு 2024.08.22 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர், கிராம உத்தியோகத்தர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் வெற்றி பெற்ற பயனாளிக்கு பிரதேச செயலாளரினால் வீடு கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












