செய்திகள்






பௌர்ணமி கலை விழா நிகழ்வு:பௌர்ணமி கலை விழா
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமும் இணைந்து நடத்தும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் 2025.10.06 அன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பௌர்ணமி கலை நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூசகர் N. சிவாகரன் அவர்களும் பிரதம அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் திரு. S.பார்த்தீபன், கணக்காளர் திரு.A.மோகனகுமார் மற்றும் கௌரவ அதிதிகளாக கிராம உத்தியோகத்தர் திரு.S டிலக்ஷன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மகேசதுரை மலர்விழி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ராதா கமலதாஸன், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத் தலைவர் திரு. பா.ரமேசன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். மற்றும் கலைஞர்கள், பொதுமக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், கலைமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வானது ஆலய பூசையுடன் ஆரம்பமாகி மங்கல வாத்தியங்கள் முழங்க அதிதிகள் அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன் பரமநயனார் அறநெறிப்பாடசாலை மாணவியின் தேவாரத்துடன் ஆரம்பமாகி ஆலய பூசகரால் ஆசியுரை வழங்கப்பட்டது பின்னர் ஏற்பட்ட மழை காரணமாக நிகழ்வுகள் இடை நிறுத்தப்பட்டன.





















