எமது பிரதேச செயலாளரின் ஆலோசனையின் பேரில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களிற்கிடையே கலைத்திறனை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன் முதல் நாள் நிகழ்வு 16.09.2019 திங்கட்கிழமை பி.ப 3 மணிக்கு எமது செயலக மாநாட்டு மண்டபத்தில் எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சந்தியானந்தி அவர்களது தலைமையில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் நிர்வாக பிரிவின் Smile தரவளையமும், கலாசார பிரிவின் வீணை தரவளையமும் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன் போது எமது செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களினால் வெளிப்படுத்திய கலைத்திறமைகளை கண்டுகளித்தது மட்டுமல்லாமல் இவ்வாறான திட்டத்தினை அமுல்படுத்த அனுமதியளித்த பிரதேச செயலாளருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.

நாளாந்தம் வேலைப்பளுக்களின் மத்தியில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் மனச்சோர்வை போக்கி மகிழ்ச்சியான அலுவலக சூழலை உருவாக்கும் முயற்சியாகவே ஒவ்வொரு மாதமும் வரும் 3 வது திங்கட்கிழமை மாலை வேளையில் குறித்த கலை நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top