சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினத்தையொட்டி ஆரையம்பதியில் கொடி விற்பனை மாதம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் அமைச்சின் சமுர்த்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தின கொடி விற்பனை மாதத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் இந் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன் போது முதல் கொடியினை பிரதேச செயலாளருக்கு அணிவிப்பதனையும் நிகழ்வில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.













