அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது எண்ணக்கருவில் உதயமான, எமது தாய் நாட்டை போதையில் இருந்து விடுபட்ட ஒரு நாடாக மாற்றியமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக
போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான "சித்திரை புதுவருட உறுதி உரை இன்று (03) நாடு பூராகவும் காலை 8.30 மணிக்கு இடம் பெற்றது.
அதற்கு அமைவாக எமது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் உறுதி உரை வாசிக்கப்பட்டு சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது எமது பிரதேச செயலகத்தின் அனைத்து அலுவலக , சமுர்த்தி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















