மாவட்ட செயலகமும் மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பௌர்ணமி கலை விழா ஆரையம்பதி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய முன்றலில் மாலை 6 மணியளவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந் நிகழ்வில், மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம்,
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி திருமதி நவரூபரஞ்சினி, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஜீ.அருணன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் ஆரையம்பதி மண்ணிற்கே உரித்தான பல்வேறு கலையம்சங்கள் இதன்போது அரங்கேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.













