உலக நீரழிவு தினத்தினை முன்னிட்டு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனியொன்று (14) திகதி முன்னெடுக்கப்பட்டது.
ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எஸ்.எப்.அல்மேடா அவர்களது தலைமையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனியானது பிரதான வீதி வழியாக பாலமுனை சந்தி வரைக்கும் சென்று மீண்டுமாக திரும்பி வைத்தியசாலையினை சென்றடைந்தது.
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.ரமேஸ் அவர்களது தலைமையிலான உத்தியோகத்தர்கள், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது தலைமையிலான உத்தியோகத்தர்கள் அடங்களாக பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பொதுமக்களுக்கான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வைத்திய ஆலோசனைகள் அடங்கிய கையேடுகள் என்பன இலவசமாக விநியோகிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




















