"நேர்மையான கலாசாரம் - சுத்தமான இலங்கை" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், எமது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் 'நேர்மை வாரம்' (Integrity Week ) சிறப்பு நிகழ்வு இனிதே நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் உதவி பிரதேச செயலாளர் திரு. கிருஷ்ணப்பிள்ளை இளம்குமுதன் அவர்களால் உறுதிமொழி வாசிக்கப்பட்டதற்கு இணங்க அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் ஆற்றிய உரையில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச சேவையினதும் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துதல், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பினைக் கட்டியெழுப்புதல் ஆகியன தற்போதைய அரசின் முதன்மையான எதிர்பார்ப்பாக அமைந்துள்ளதுடன், இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து, அரச சேவையின் நெறிமுறை விழுமியங்களை வலுப்படுத்துதல் தலையாய நோக்கமாகும் என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top