2024.10.01 ChildrensDay Banner
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வானது "பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக நடாத்துவோம்" மற்றும் "வலுவான பராமரிப்பு மற்றும் ஆதரவுடன் முதியோர்களை கௌரவப்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் 2024.10.01 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாவிலங்கதுறை கிராம உத்தியோகத்தர் பிரிவின் பற்றிமாபுரம் இளவேனில் விளையாட்டு மைதானத்தில் பி.ப 3.00 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் அதிதிகளாக பிரதேசத்தின் சிறுவர்களும் முதியோர்களும் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். அத்தோடு சிறுவர்களின் பல்வேறான கலைநிகழ்ச்சிகளும் முதியோர்களின் ஆடல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்று சிறுவர்களின் ஆக்கங்களுடனான நான்காவது ஊற்று கையெழுத்துச் சஞ்சிகையும் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், ஆரையம்பதி சுகாதார வைத்திய அலுவலக சிரேஷ்ட பொதுசுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2024.10.01 Capture 01
2024.10.01 Capture 02
2024.10.01 Capture 03

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top