மண்முனைப்பற்று பிரதேச செயலக இப்தார் நிகழ்வு 2022.04.20 ஆம் திகதி காங்கேயனோடை கிராம உத்தியோகத்தர் பிரிவின் ஈரான் நகர் ரசூல் பள்ளிவாசலில் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. V.லோகினி, மேலதிக மாவட்ட பதிவாளர் A.G.M.பர்சாத், நிர்வாக உத்தியோகத்தர் திரு. S.திவாகரன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் A.L.முசாதிக், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் S.கோமளன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததுடன் இந்நிகழ்வினை மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசாரப் பிரிவு உத்தியோகத்தர்கள் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















