மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஆரையம்பதி வங்கி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்கி வரும் சபர் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் புதிய அலுவலகத்தினை திறந்து வைக்கும் வைபவமும், வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று 09.02.2022 புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் மு.ப 9.00 மணிக்கு ஆரம்பமானதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு.சி.புவனேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் ஆரையம்பதி சமுர்த்தி வலய வங்கி முகாமையாளர் திரு.K.நவரஞ்சன், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் கணக்காய்வு உத்தியோகத்தர் S.உனேஸ்குணாளன், பிரதேச சபை உறுப்பினர் M.I.M.நஸீம், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சபர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், ஏனைய அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.























