பசுமை உற்பத்தித் திறன் தொடர்பாக பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று 02.12.2019 திங்கட்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஆரையம்பதியில் நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இச் செயலமர்வினை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இச் செயலமர்வில் உற்பத்தித்திறன் மாவட்ட ஒருங்கினைப்பாளர் ஆர்.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் வளவான்மை ஆற்றியிருந்தார்.

பிரதேச செயலக உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களின் ஒருங்கமைப்பில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் மண்முனைப்பற்று, வெல்லாவெளி மற்றும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கலென பெருமளவானோர் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

News & Events

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
செப்2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top