பேண்தகு காணி முகாமைத்துவ தினம் - 2023.06.04
பேண்தகு காணி முகாமைத்துவ தினத்தினை முன்னிட்டு 2023.06.04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிரான்குளம் தொடக்கம் செல்வாநகர் கிழக்கு வரையான கரையோர பகுதிகளில் கடற்கரையோரம் சுத்தப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு கரையோரம் பேணல் உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மீன்பிடி போதனாசிரியர், மீன்பிடிச்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















