திருநாவுக்கரசு நாயனார் குரு பூசை தினம்
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் தாழங்குடா விநாயகர் அறநெறி பாடசாலையில் திருநாவுக்கரசு நாயனார் குருபூசையானது 2025.04.27 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வானது தாழங்குடா காளியம்மன் ஆலயத்திலிருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாகி மட்/ விநாயகர் வித்தியாலயத்தின் ஊடாக விநாயகர் அறநெறிப்பாடசாலையை வந்தடைந்தது. பின்பு கலை நிகழ்வுகள், சிறப்பு சொற்பொழிவு என்பன இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.












