நீர் மூலாதாரங்களை பாதுகாக்கும் தினம் - 2023.06.03
நீர் மூலாதாரங்களை பாதுகாக்கும் தினத்தினை முன்னிட்டு 2023.06.03 ஆம் திகதி சனிக்கிழமை காங்கேயனோடை வாவி பகுதியில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மீன்பிடி போதனாசிரியர், மீன்பிடிச்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















