தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சினால் *அவசர காலநிலை நடவடிக்கை* *"Urgent Climate Action*" எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட *பொலித்தீன் பைகளுக்கு மாற்றீடாக துணிப்பைகளை வழங்கும்* நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் தலைமையிலும், உதவி பிரதேச செயலாளரின் வழிகாட்டலிலும், பிரதி திட்டமிடல் பணிப்பாளரின் ஒருங்கமைப்பு மற்றும் ஆலோசனைக்கிணங்கவும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றலுடன் 12.06.2026 மு.ப 8.30 மணியளவில் , ஆரையம்பதி பொதுச் சந்தையில் இந்நிகழ்வானது இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர், பிரதேச செயலகத்தின் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,
மண்முனைபற்று பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்கள், சிவா வித்யாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.













