மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு பொது சேவை மூலம் சமூகத்தை மேம்படுத்தல் தொடர்பாக பயிற்சி நெறி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2025.12.17 ஆந் திகதி பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலில் நிருவாக உத்தியோகத்தர் திரு.வே. தவேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சி நெறியினூடாக உத்தியோகத்தர்கள் மக்களுக்கான சேவையினை மேற்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகள் தொடர்பான பூரண விளக்கத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.















