தேசிய வீடமைப்பு அபிவிருத்தி திட்டம்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 2025ம் ஆண்டில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட 04 வீட்டுத்திட்டங்களில் 3 வீடுகள் இன்று கௌரவ பிரதி அமைச்சர் திரு.TB .சரத் நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு அவர்களினால் உத்தியோக பூர்வமாக பயனாளிகளிடம் கையளிப்பு செய்யப்பட்டது. புதுக்குடியிருப்பு தெற்கு தாழங்குடாஇராஜதுரைக்கிராமம் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 02.10.2025 அன்று நடைபெற்றதுடன் இதில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பிரபு, பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஷ் , தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள், NHDA தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பிரிவுக்கு பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உ்த்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குபற்றினார்கள்.

















