நலம் நல்கும் நவராத்திரி விழா 2025
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 2025.10.01 ஆம் திகதி புதன்கிழமை வாணி விழா நிகழ்வானது பக்திப்பெருமிதத்துடனும் கலை நிகழ்வுகளுடனும் ஆன்மீக சொற்ப்பொழிவுகளுடனும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் , கலைமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வரவேற்பு நடனம் , தலைமையுரையுடனான ஆன்மீக சொற்ப்பொழிவு , கலை நிகழ்வுகள் , கலைவாணி கற்றல் உபகரணம் வழங்குதல் என பல்வேறு நிகழ்வுகளும் இவ்விழாவை மேலும் அலங்கரித்தன.













