SEIRI வாரம் செயற்படுத்தல்
எமது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 01.09.2025 SEIRI வாரத்தின் முதலாம் நாளான இன்று வெளிச்சூழலை சுத்தப்படுத்தும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கான Banner எமது பிரதேச செயலாளர் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதில் கணக்காளர் , நிருவாக உத்தியோகத்தர் , உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்கள் ,5S உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும் கிளை ரீதியாக உத்தியோகத்தர்கள் அனைவரும் தங்களுக்குப்பொறுப்பான வெளிச்சூழலை சுத்தம் செய்தனர்.


















