பிரதேச மட்ட கண்காட்சி
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 30.07.2025 ம் திகதி மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தாழங்குடா மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலைய மாணவர்களின் பிரதேச மட்ட கண்காட்சி நடைபெற்றது.
இதில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,சிரேஷ்ட தையல் போதனாசிரியை மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக கணக்காளர்,நிருவாக உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



















