தெய்வீக கிராம நிகழ்வு
மேற்படி நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி . தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் 01.06.2025 ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலக சர்வ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலத்துடன் ஆரம்பமாகி திருநீற்றுக்கேணி செல்வ விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.
ஆலய பூசை, கோமாதா பூசை ,மரநடுகை என்பன ஆலய நிகழ்வுகளாக இடம்பெற்றதுடன் நந்திக் கொடி ஏற்றல், மாணவர்களின் கலை நிகழ்வுகள் என்பனவற்றுடன் சைவப்புலவரும் சைவ பண்டிதருமாகிய யோ.கஜேந்திரா ஐயா அவர்களின் சிறப்பு சொற்பொழிவும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டிற்கான பிரதேச மட்ட ஆக்கத்திறன் போட்டிகளுக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டு இறுதியில் அன்னதானம் வழங்குதலுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
 
vil 1
 
vil 2

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top