மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சிகளில் இணைத்துக் கொள்வதற்கான தொழிற்சந்தை நிகழ்வு.
மேற்படி நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளரின் தலைமையில் 25.02.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலக ஒருங்கிணைப்பாளரான திரு. மைக்கல் கொலின் அவர்களும் , திரு. ஆனந்த் (மனிதவள உத்தியோகத்தர் மாவட்ட செயலகம்) மற்றும் தொழில் பயிற்சி நிறுவனத்தின் பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கான நேர்காணல் இடம்பெற்று தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான தெளிவூட்டல்களும் வளவாளர்களினால் வழங்கப்பட்டது.















