மேற்படி விடயமானது கௌரவ சனாதிபதி அவர்களின் சிந்தனைக்கு அமைவாக Clean Sri Lanka எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப்பயண முடிவிடம்" எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரையோர பகுதிகளை சுத்தம் செய்யும் நிகழ்வானது கரையோரம் பேணல் திணைக்களம், கடல்சார் சூழலியல் பாதுகாப்பு அதிகார சபை, அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் 16.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது ஆரையம்பதி கிழக்கு, பாலமுனை, புதுக்குடியிருப்பு, கிரான்குளம் வடக்கு, கிரான்குளம் தெற்கு ஆகிய 5 இடங்களில் குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர்களின் ஒருங்கிணைப்பில் பிரதேச மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது . இதில் பிரதான நிகழ்வாக புதுக்குடியிருப்பு கடற்கரையில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி .தெட்சணகெளரி தினேஷ் அவர்களின் தலைமையில் குறித்த நேரத்திற்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக அலுவலர்கள்அனைவரும் கலந்து கொண்டனர்.

























