2025 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகம் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வருடத்தின் முதல் நாளான 2025.01.01 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 8.30 மணிக்கு அனைத்து உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
மேற்படி நிகழ்வில் தேசிய கொடி ஏற்றல் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக உயிர் நீத்த அனைவரையும் நினைவுகூறும் முகமாக இரு நிமிட மௌன இறை வணக்கம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் Clean Sri Lanka பிரஜைகளின் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டிருந்ததுடன் பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களினால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. அத்துடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு இந்நிகழ்வானது இனிதே நிறைவுற்றது.












