மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் சமூக உள்வாங்கல் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்தும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் "உள்ளடங்கலான மற்றும் நிலைபேறான எதிர்காலத்திற்காக அங்கவீனமுற்ற நபர்களின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல்" எனும் தொனிப்பொருளில் 2024.12.24 ஆம் திகதி செவ்வாய்கிழமை இன்று மு.ப 9.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர், சமூக சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், புகலிட நிறுவனத்தின் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். இதன் போது மாற்றுத்திறனாளிகளின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன் அவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












