ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் தொழுநோய்க்கான நடமாடும் பரிசோதனை மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 2024.08.17 ஆம் திகதி சனிக்கிழமையன்று மு.ப 8.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













