சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக காடாக்கும் நிகழ்வு 2024.08.28 ஆம் திகதி புதன்கிழமை இன்று மு.ப 8.45 மணியளவில் புதுக்குடியிருப்பு தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், வெளிக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சங்கங்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் இதன் போது 2500 பனம் விதைகள் நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













