மண்முனைப்பற்று பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் கமத்தொழில் அமைச்சினால் மானியமாக வழங்கப்பட்ட பயறு அறுவடை நிகழ்வானது விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்குபடுத்தலுடன் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 2024.06.19 ஆம் திகதி புதன்கிழமை இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகெளரி தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விவசாய போதனாசிரியர், கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மேட்டுநில கமநல அமைப்பு, விவசாயிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













