சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆரையம்பதி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு விபுலானந்தா சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் 2024.05.31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இன்று மு.ப 9.30 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி கொடி தின நிதி சேகரிப்பு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், ஆரையம்பதி சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.












