இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகமும் தாழங்குடா சேனைத்தெரு வீரமாகாளியம்மன் ஆலயமும் ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறி பாடசாலையும் இணைந்து நடாத்திய மகா சிவராத்திரி 2024.03.08 ஆந் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு தாழங்குடா வீரமாகாளியம்மன் ஆலய முன்றலில் அறநெறி மாணவர்களின் கலை நிகழ்வுகளுடனும், ஆரையூர் கலைக்கழகத்தின் பங்கு பற்றுதலுடனும் சிறப்பாக நடைபெற்றது.
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு. சின்னத்துரை திவாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த கரகாட்டம், கோலாட்டம், கும்மி, கரகம், தாளலயம், தனி நடனம், குழு நடனம், நாடகம், பேச்சு, பண்ணிசையும் பஜணையும், கதாப்பிரசங்கம் மற்றும் ஆரையூர் கலாமன்றத்தின் இன்னிசை மழையும், அதிதிகளின் சிறப்பு சொற்பொழிவுகளும் மேடையை அலங்கரித்தன.
மேலும் சிவராத்திரி கலை நிகழ்வில் கலந்து கொண்ட அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.













