இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாது ஒழிப்பதற்கான தேசிய வாரத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. N. சத்தியானந்தி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 2023.12.14 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று உதவி பிரதேச செயலாளர் திருமதி. L. விவேகானந்தராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரதேச செயலக வளாகத்தினுள் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் துரித எண் (Hotline) குறிப்பிடப்பட்ட பதாதைகள் கிளைகள் ரீதியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














