WhatsApp Image 2023 12 12 at 04.27.12 1
உத்தியோகத்தர்களின் மன அழுத்தங்களை போக்கி அனைவரும் மகிழ்ச்சியான முறையில் தங்களது கடமைகளை நிறைவேற்றும் வகையில் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய இசையும் இரசனையும் நிகழ்வானது 2023.12.11 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று பிற்பகல் பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசத்தின் மூத்த கலைஞரும், கண்டி வெல்வூட் நுண்கலைக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் இலங்கை கலைக்கழகத்தின் நீண்டகால நிறைவேற்று அதிகார உறுப்பினராகவும் இலங்கை வானொலி மற்றும் ரூபவாஹினியில் பாடகராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்ற பாடகர் சங்கீதவேதி, கலைவாணன் திரு. விஸ்வநாதன் சதானந்தம் அவர்கள் வளவாளராக கலந்து சிறப்பித்தார்.
இசையானது எவ்வாறு ஒரு மனிதனை ஆட்கொள்கின்றது என்பதனை பல தத்துவ பாடல்களூடாகவும் கதைகளினூடாகவும் தனது கருத்துக்களை சிறப்பான முறையில் வழங்கினார். இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பாடல்களும் இடம்பெற்றது. இந் நிகழ்வினை பிரதேச செயலக கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Image 2023 12 12 at 04.27.12
WhatsApp Image 2023 12 12 at 04.27.13 1
WhatsApp Image 2023 12 12 at 04.27.13
WhatsApp Image 2023 12 12 at 04.27.14
WhatsApp Image 2023 12 12 at 04.27.11

News & Events

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு...

04
සැප්2026
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் மூன்றாம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும்...

Scroll To Top