
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி நடாத்தும் விழிப்புணர்வு நிகழ்வு, அங்கீகரிக்கப்படாத முறையில் வைப்புப் பெறலும் நிதித் தொழிலை நடாத்துதலும் எனும் தொனிப்பொருளில் 2023.08.24 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.00 - பி.ப 12.30 மணி வரை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் திரு. க.பிரபாகரன், கிழக்கு பிராந்திய முகாமையாளர், இலங்கை மத்திய வங்கி, திருகோணமலை மற்றும் வளவாளராக திரு. சண்.குறிஞ்சிதரன், பிரதி பணிப்பாளர், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் இந்நிகழ்வின் பங்குபற்றுனர்களாக மண்முனைப்பற்று பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















