
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எமது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும் விற்பனை சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டு 2023.04.10 ஆம் திகதி திங்கட்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரையம்பதி பிரதான வீதியில் அமைந்துள்ள சிறு கைத்தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் விற்பனையும் இடம்பெற்று வருகின்றது.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. V.லோகினி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















