எமது மாவட்டத்திலும் அதிவேகமாக பரவி வருகின்ற COVID-19 தொற்று காரணமாக பொதுமக்களின் வெளி நடமாட்டத்தைக் குறைத்துக் கொள்ளும்பொருட்டு அத்தியாவசியப் பொருட்களை வீட்டிலிருந்தவாறே பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே பின்வரும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து தங்களது அத்தியாவசிப் பொருட்களை வீட்டில் இருந்தவாறு பெற்றுக் கொள்ள முடியும் என்பதை மண்முனைப்பற்று பொதுமக்களுக்கு அறியத்தருகின்றேன்.
இக் காலகட்டத்தில் தாங்கள் ஏதேனுமொரு வகையில் சிக்கல்களை எதிர்நோக்கினால் 065 224 8899 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.





















