சமுர்த்தி தேசிய வேலைத்திட்ட மாதத்தை முன்னிட்டு 27. 07. 2026 ம் திகதி மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் வடக்கு 150 B பிரிவில் ரண்விமன ஆரோக்கிய வசதியுடைய வீடு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலமையில் திறந்து வைக்கப்பட்டதோடு ரூபா பத்தாயிரம் பெறுமதியான உணவுப் பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மகாசங்க நிறைவேற்றுக்குழு தலைவி திருமதி R. சங்கவி சமுர்த்தி தலமையக முகாமையாளர் திரு. க. உதயகுமார், கருத்திட்ட முகாமையாளர் திரு. சா. ஆனந்த மோகன், ஆரையம்பதி வங்கி முகாமையாளர் திரு. கா. நவறஞ்சன், தாழங்குடா வங்கி முகாமையாளர் திருமதி சோ. தமிழ்வாணி, மற்றும் சமூக அபிவிருத்தி உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.













