பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை திறனை வெளிப்படுத்தும் நோக்கில் எமது பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களது ஆலோசனை மற்றும் தலைமையில் மாதாந்தம் நடாத்தப்பட்டுவரும் "சிறுதுளி - 2" நிகழ்வானது 21.10.2019 ஆந் திகதி 3.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது Bright தரவளையத்தினால் (EDO) விழிப்புணர்வு வில்லுப்பாட்டு கலை நிகழ்வொன்று நிகழ்த்தப்பட்டதுடன், இவர்களால் நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்விற்கு உத்தியோகத்தர்ளால் அமோக வரவேற்பு கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.















