"முதியோர்களான உங்களுக்கு சிறந்த இடத்தினை வழங்கும் நாளைய தினத்தினை நோக்கி" எனும் தொனிப்பொருளில் மண்முனைப்பற்று பிரதேச செயலகம் முதியோரை கௌரவிக்கும் நோக்கில் நடாத்திய சர்வதேச முதியோர் தின விழா கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது ஆலோசனைக்கு அமைவாக உதவிப்பிரதேச செலலாளர் திருமதி.விவேகானந்தராஜா லோகினி தலைமையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட கண்கவர் நிகழ்வுகளையும், சிரேஸ்ட பிரஜைகளை அதிதிகள் கௌரவிப்பதையும், நிகழ்வில் கலந்துகொண்டோரில் ஒருபகுதியினரையும் படங்களில் காணலாம்.
























