விபத்துக்களை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று மண்முனைப்பற்றில் நடைபெற்றது.
எமது பிரதேச செயலக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களது வழிகாட்டலின் கீழ் விபத்துக்களை குறைத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று 23.07.2019 மாவிலங்கத்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.
இச் செயலமர்விற்கு வளவாளராக எமது பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பதவிநிலை உத்தியோகத்தர் திருமதி ஜாஹிதா ஜலால்தீன் அவர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வினை ஏற்படித்தியிருந்ததுடன், மாவிலங்கத்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கான மகளிர் சங்கத்தின் அங்கத்தவர்கள் இதன்போது பங்குபற்றி பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.














