ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படையில் "நாமும் எமது சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு" பிரதேச செயலகமும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இதன் அடிப்படையில் இன்று 06.04.2019 சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் தாழங்குடா தேசிய கல்வியியற் கல்லூரி வளாகத்தில் பாரிய சிரமதானப் பணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
எமது பிரதேச செயலாளர் திருமதி. நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வில் ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் கே.ரமேஸ் அவர்களும் பொது சுகாதார பரிசோதகர்களும், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஊழியர்கள் வாகனங்களுடன் பிரசன்னமாகியிருந்ததுடன், இச்சிரமதான பணிக்காக பாரிய பங்கினை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

















