மண்முனைப்பற்று கிராமிய விளையாட்டு விழா
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி . தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாசார உத்தியோகத்தர்களின் தலைமையில் கிராமிய விளையாட்டு நிகழ்வானது மட்/மட்/தர்மபுரம் தர்மரெத்தினம் வித்தியாலத்தில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் பி.ப 2.30 மணிக்கு 28.05.2025 திகதி இனிதே ஆரம்பமாகியது.
நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பல வகையான விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டது. முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நடுவர்களாக செயற்பட்டு தெரிவு செய்தனர். பின்பு மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டு, இறுதியில் கலாசார உத்தியோகத்தர் திருமதி. வளர்மதி ராஜ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.












