எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள Youth Training Center ல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான உற்பத்தி திறன் மற்றும் புத்தாக்கம் பற்றிய அடிப்படை சான்றிதழ் பாடநெறியானது தேசிய உற்பத்தி திறன் செயலகத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் பிரதேச செயலாளர் திருமதி.தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இன்று 18.03.2025 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை புதுக்குடியிருப்பு Youth Training Center இல் நடைபெற்றது.
இதன் வளவாளராக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஜீவராணி லோகநாதன் அவர்கள் கலந்து கொண்டதுடன் 60 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.












