இராமகிருஸ்ண குருமகராஜியின் 190 வது ஜனன தின விழா
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தாழங்குடா ஸ்ரீ விநாயகர் அறநெறிப் பாடசாலையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் எமது பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய இராமகிருஸ்ண குருமகராஜியின் 190 வது ஜனன தின விழா 2025.03.02 ஆந் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வு மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகத்தின் இந்து சமய கலாசாரத் திணைக்களத்தின் அலுவல்களுக்குப் பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன் இந் நிகழ்வில் அறநெறிப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
















