ஆரையம்பதி மேற்கு கிராம சேவகர் பிரிவில் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் ஆரம்பிப்பதற்கான கூட்டம் 25.06.2024 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு ஆரையம்பதி மேற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள கல்வீட்டுத் திண்ணையடி பரமநயினார் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரையம்பதி மேற்கு கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.













