சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்று நிரூபத்திற்கு அமைய 2024 சித்திரை புது வருட சேமிப்பு வாரமும் கைவிசேட நிகழ்வும் 2024.04.15 ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 9.00 மணிக்கு சமுர்த்தி வங்கியில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வங்கி முகாமையாளர் திரு. கா. நவரஞ்சன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக பிரதேச செயலாளர் அவர்களினால் புது வருட நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்ததோடு சித்திரை புத்தாண்டு சேமிப்பு வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் கைவிஷேடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















