சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எமது மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும் விற்பனை சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டு 2024.04.08 ஆம் திகதி திங்கட்கிழமையன்று மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தலைமையக முகாமையாளரின் வரவேற்புரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர், தலைமையக முகாமையாளர், முகாமைத்துவ பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பயனாளிகளின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தோடு கண்காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் நுகர்வு மற்றும் தொழில் முயற்சிக்கான கடனும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













