தொழு நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2024.02.19 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 1.00 மணிக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி. L.விவேகானந்தராஜ் அவர்களின் தலைமையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













