"சுவதரணி மூலிகைப் பயிர் வாரம்" எனும் தொனிப்பொருளில் நாடு பூராகவும் மூலிகைக் கன்றுகள் நடுகை செய்யும் நிகழ்வு 2024.02.02 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்து வைக்கப்படும் பொருட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் மூலிகை கன்றுகள் நடும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. T. தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பிரதேச செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் அவர்களால் மூலிகை கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













